சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கரூரில் அண்மையில் மின்சாரம் மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 8 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி, பாதுகாப்புக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. தலைமைச்செயலத்தில் 2 வங்கி அதிகாரிகளுடன் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளனர். அங்கும், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலான பதிவு ஒன்றை டுவிட்டரில் போட்டுள்ளார். அதில்,செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த காலத்தில், அவரை மோசடி மன்னன் என்று ஸ்டாலின் கூறிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதோடு, “தமிழக முதல்வர் ஸ்டாலினின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது. தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.