நாங்கள் களத்தில் இறங்கி பார்வையிட்டு கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாயும், வீடு இடிந்த 16 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் நிவாரண தொகையை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆகிய இரு தினங்களில் பெய்த கன மழை காரணமாக மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் மாநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் மழை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர் வீடுகள் இடிந்து சேதமடைந்தனர்.
இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மழை வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவியும் மழையினால் இடிந்த வீடுகளுக்கு 16 பேருக்கு தலா பத்தாயிரம் நிவாரண உதவி தொகை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :- கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 31 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மின்சார இணைப்பு மாவட்டத்தில் 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று நாட்களில் முழுமையான இயல்பு வாழ்க்கை திரும்பும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் ஆடு, மாடு, கன்று, கோழி, பன்றி போன்ற உயிரிழப்புகளுக்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணகெடுப்புபடி 188 கோடி தேவை. 200 ஆண்டுகள் இல்லாத அளவு மழை மாவட்டத்தில் பெய்துள்ளது.
நாங்கள் களத்தில் இறங்கி பார்வையிட்டு கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். மற்றவர்களை போல் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை. நாளை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிடுகின்றார் அவர்களே பார்த்து மத்திய அரசிடம் சொல்லட்டும், என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் காந்தி, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.