மேட்டூர் அணையை திறந்து வைத்த போது முதலமைச்சர் ஸ்டாலின் செய்த செயல் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும், நீர் இருப்பு 89.942 டிஎம்சி அடியாகவும் உள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை எந்த நேரத்திலும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வழக்கமாக ஜுன் 12ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணையை, மே 24ம் தேதியே திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, குறுவை சாகுபடிக்காக, இன்று மே 24-ல் குறுவை பாசனத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலினால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மிக முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை வரவேற்கும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலின் தட்டில் வைக்கப்பட்டிருந்த மலர்களை எடுத்து, தண்ணீர் மீது தூவினார். இதேபோல, நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனும் மலர் தூவினர். அப்போது, அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள், புகைப்படம் எடுப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் மலர் தூவுமாறு கேட்டனர்.
அதன்படி, மீண்டும் மலர் தூவிய முதலமைச்சர் ஸ்டாலின், பூவோடு சேர்த்து தட்டையும் தண்ணீரில் வீசியெறிந்தார். இதனை பார்த்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஆனால், எதிர்கட்சியினர் இதனை கிண்டடித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.