மேட்ச் பிக்சிங் மூலம் வெற்றி பெற மோடி முயற்சி… 180 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது : ராகுல் காந்தி சவால்!

மேட்ச் பிக்சிங் மூலம் வெற்றி பெற மோடி முயற்சி… 180 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது : ராகுல் காந்தி சவால்!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “மேட்ச் பிக்சிங் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடுவரை அழுத்தத்திற்கு உட்படுத்தி, கிரிக்கெட் வீரரை விலைக்கு வாங்கி, கேப்டனை பயமுறுத்தி, போட்டியில் வெற்றி பெறுவதுதான் மேட்ச் பிக்சிங்.

இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி நடுவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். மோடியின் 400 தொகுதி வெற்றி கோஷம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யாமல் சாத்தியமில்லை

பாஜகவின் இந்த மேட்ச் பிக்சிங் நாட்டின் அரசியலமைப்பை அதன் மக்களின் கைகளில் இருந்து பறிப்பதற்காக செய்யப்படுகிறது. அரசியல் சாசனம் இல்லாமல், காவல்துறை, , வற்புறுத்தல்கள் மூலம் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்திய மக்களின் குரலை ஒடுக்கும் சக்தி உலகில் எவருக்கும் இல்லை.

மக்கள் முழு மனதுடன் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்றால், அவர்களின் மேட்ச் பிக்சிங் வெற்றி பெறும். பாஜக வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால் நாடு முழுவதும் தீப்பற்றி எரியும். இந்தத் தேர்தல் வாக்குகளுக்கானது அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதாக நடக்கிறது.

மேட்ச் பிக்சிங், சமூக வலைதளங்கள், ஊடகங்களுக்கு அழுத்தம் தருவது இவையெல்லாம் இல்லையென்றால் பாஜகவால் 180 சீட் கூட வெல்ல முடியாது. இரண்டு முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், எங்கள் வங்கி கணக்குகள் சீல் வைக்கப்பட்டன. இதை ஏன் ஆறு மாதங்களுக்குப் பிறகும் தேர்தலுக்கு முன்பும் அவர்கள் செய்யவில்லை” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

8 minutes ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

46 minutes ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

1 hour ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

1 hour ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

2 hours ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

3 hours ago

This website uses cookies.