புதுமணத் தம்பதிகளை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது தமிழக வழக்கம்.அந்த வழக்கத்தை தெலுங்கில் ஆஷாட மாதத்தில் தெலுங்கர்கள் கையாளுகின்றனர்.
தற்போது ஆஷாட மாதம் முடிந்து விட்ட நிலையில் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த கணவனுக்கு அவருடைய மாமியார் நூறு வகை பலகாரங்களுடன் கூடிய விருந்து சாப்பாடு போட்டு அசத்தினார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தமரோட கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரிக்கும், காக்கிநாடாவை சேர்ந்த ரவி தேஜாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
கடந்த ஒரு மாதம் ஆஷாட மாதம் ஆகையால் புதுமண தம்பதிகள் சேர்ந்து இருக்க சம்பிரதாய ரீதியாக தடை உள்ளது.எனவே ரத்தினகுமாரி, ரவி தேஜா ஆகியோர் பிரிந்திருந்தனர்.
ஆஷாடம் முடிந்து தற்போது சிராவண மாதம் பிறந்துள்ளது.எனவே மனைவியை அழைத்து செல்வதற்காக ரவி தேஜா கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
அவருக்கு அவருடைய மாமியார் நூறு வகையான பலகாரங்களுடன் கூடிய விருந்து சமைத்து பரிமாறி அசத்தினார்.
மாமியாரின் இந்த விருந்தால் மருமகன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.