புதுமணத் தம்பதிகளை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது தமிழக வழக்கம்.அந்த வழக்கத்தை தெலுங்கில் ஆஷாட மாதத்தில் தெலுங்கர்கள் கையாளுகின்றனர்.
தற்போது ஆஷாட மாதம் முடிந்து விட்ட நிலையில் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த கணவனுக்கு அவருடைய மாமியார் நூறு வகை பலகாரங்களுடன் கூடிய விருந்து சாப்பாடு போட்டு அசத்தினார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தமரோட கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரிக்கும், காக்கிநாடாவை சேர்ந்த ரவி தேஜாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
கடந்த ஒரு மாதம் ஆஷாட மாதம் ஆகையால் புதுமண தம்பதிகள் சேர்ந்து இருக்க சம்பிரதாய ரீதியாக தடை உள்ளது.எனவே ரத்தினகுமாரி, ரவி தேஜா ஆகியோர் பிரிந்திருந்தனர்.
ஆஷாடம் முடிந்து தற்போது சிராவண மாதம் பிறந்துள்ளது.எனவே மனைவியை அழைத்து செல்வதற்காக ரவி தேஜா கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
அவருக்கு அவருடைய மாமியார் நூறு வகையான பலகாரங்களுடன் கூடிய விருந்து சமைத்து பரிமாறி அசத்தினார்.
மாமியாரின் இந்த விருந்தால் மருமகன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.