என் ஆதரவு இபிஎஸ்க்குத்தான் : ஓபிஎஸ்சை ஷாக் ஆக வைத்த கூட்டணி கட்சி தலைவர்!!

ஒற்றை தலைமை மோதல் காரணமாக 4 பிரிவாக அதிமுக உள்ளது. இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக யாருக்கும் ஆதரவு என்ற முடிவு எடுக்காத நிலை உள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கொங்கு இளைஞர் கட்சியின் தலைவரான தனியரசு ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஓபிஎஸ் அணியை அதிர்ச்சி அடையவைக்கும் நிலையில், மற்றொரு கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சி தேர்தல் தொடர்பாக ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

இந்தநிலையில், தமிழக அரசு நியாய விலை கடைகளில் சக்கரைக்கு பதிலாக பனைவெல்லம் வழங்குவதாக கடந்த 2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்ததாகவும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்ற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை பொதுச் செயலாளர் என் ஆர் தனபாலன் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து முழக்கமிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர் தனபாலன் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்குத்தான் எனவும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாயி விவசாயிகளின் நலனில் பெரும் பங்காற்றியவர் என தெரிவித்தார்.

மீண்டும் அவர் ஆட்சியில் இருந்திருந்தால் கல் இறக்குவதற்கு அனுமதி தந்திருப்பார் எனவும் ஆகையால் பெருந்தலைவர் மக்கள் கட்சியினருடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கு தான் என உறுதிப்பட தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.