மக்களை ஏமாற்ற எனக்கும் தெரியும்… தரமற்றவர்கள் கையில் ஆட்சியும், அதிகாரமும் ; சீமான் ஆவேசம்..!!

விருதுநகரில் காமராஜரை தோற்கடித்தது திமுக அல்ல எனவும், தமிழ் தான் தோற்கடித்தது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ‘நாம் தமிழர் கட்சி ஏன் ஆட்சிக்கு வர வேண்டும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழகத்தில் உண்மையான காமராசர் ஆட்சி வர வேண்டும் என்றால், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கூறினார். மேலும், ஓட்டுக்காக மக்களை ஏமாற்ற எனக்கு மனசு வரமாட்டேங்குது என தெரிவித்த அவர், எனக்கும் டெக்னிக்காக ஏமாற்றத் தெரியும், என்றார். பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை சொல்லிவிட்டு போவது தானே என பேசிய சீமான், கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர் தான் நாட்டில் இருக்கிறார் என விமர்சனம் செய்தார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இலவசம் என்பது இல்லை எனவும், கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக தருவோம் என்றார். அதிமுகவில் உள்ளவர்கள் அப்போலோவுக்கும், திமுகவில் உள்ளவர்கள் காவிரி மருத்துவமனைக்கும் செல்கிறார்கள் என்றால், ஏன் அரசு மருத்துவமனைகளை கட்டி வைத்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அரசை நடத்துபவர்களே அரசு பள்ளியில் படிப்பதில்லை எனவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது இல்லை என்றால், தரமற்ற போச்சு என்று அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள் என்றார். காரணம் என்னவென்றால் தரமற்றவர்கள் கையிலே அதிகாரத்தை கொடுத்தது தான் என்றார். மேலும், உலகத்தில் இருக்கும் அரசுகள் நடத்துவது எல்லாம் தரமாக உள்ளது எனவும், இந்தியாவில் மட்டுமே அரசு நடத்துவது கேவலமாக உள்ளது, என்றார்

எத்தனை வாக்குறுதிகளை இந்த ஆட்சியாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் எனவும், அதில் ஒன்றை ஆவது நிறைவேற்றி இருக்கிறார்களா..? அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் நாட்டில் வறுமை இருந்திருக்காது, எனக் கூறினார்.

விருதுநகரில் காமராஜரை தோற்கடித்தது திமுக அல்ல எனவும், தமிழ் தான் தோற்கடித்தது என்றார். அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த பக்தவச்சலம் இந்தி திணிப்பை ஏற்றுக் கொண்டதால், தமிழ் காமராஜரை தோற்கடித்தது என்றார். தற்போது தமிழ் செத்து போய் விட்டது எனவும், தமிழ்நாட்டிலே ஏட்டிலே எங்கும் தமிழ் இல்லை எனவும், பயிற்று மொழி, பண்பாட்டு மொழி, வழிப்பாட்டு மொழி என எதிலும் இல்லை என் தாய் மொழி எனக் கூறினார். மேலும், தமிழை மீட்டிறுவாக்கம் செய்து வாழ வேண்டும் என்றால், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமென சீமான் பேசினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பிரம்மாண்ட படத்துடன் சினிமாவுக்கு Bye Bye சொல்லும் ராஜமௌலி? அதிர்ச்சியில் திரையுலகம்…

இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…

24 hours ago

விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?

கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…

1 day ago

மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது : திருமாவளவன் வேண்டுகோள்..!

விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…

1 day ago

இந்தியா – பாக் போர் நிறுத்தம்.. சமாதானம் செய்த அமெரிக்கா : பேச்சுவார்த்தை தொடரும்..!

பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…

1 day ago

ச்சீ…உங்களுக்குலாம் வெக்கமே இல்லையா? பாஜகவை கண்டபடி பேசும் பிரகாஷ் ராஜ்? என்னவா இருக்கும்?

அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…

1 day ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… சென்னையில் மட்டும் இத்தனை போட்டிகளா? வெளியான தகவல்!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…

1 day ago

This website uses cookies.