எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் வசிக்கும் ஹட்டி சமுதாயத்தினரையும், தமிழகத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினரையும் எஸ்.டி., பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தத் தகவலை அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் வெளியிட்டனர்.
தமிழகத்தில் நரிக்குறவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நரிக்குறவர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், நரிக்குறவர் சமுதாயத்தினரை எஸ்.டி., பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது அச்சமுதாய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி அவர்களுக்கும், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அவர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. தமிழக பாஜகவின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையையும் மனதில் கொண்டு, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளார் நமது பாரத பிரதமர்.
இந்த மகத்தான முடிவு நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சம உரிமையையும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.