நீட்டை வைத்து திமுக அரசியல் செய்யக்கூடாது.. சொத்து வரி உயர்த்துவது என்பதற்காக இப்படியா…? பிரமலதா விஜயகாந்த்

சொத்து வரி உயர்வை கண்டித்து 11ம் தேதி அனைத்து மாநகராட்சிகள் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

விருதுநகரில் இன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேமுதிக கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வருகை தந்தார். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :- டீசல், பெட்ரோல் உயர்ந்தால் எல்லா அத்தியாவசிய பொருட்களும் உயர்கிறது. டோல்கேட் கட்டணம் உயர்ந்துள்ளது. நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் குறைப்பதற்கான வழியை யாரும் செய்ய மறுக்கிறார்கள்.

மக்களுடைய பிரச்சினையை உணராமல் அரசாங்கம் மக்களுடைய பணத்தை வைத்து எப்படி அரசை நடத்துவது என்று பாராமல், மக்களுடைய கஷ்டத்தை உணரக்கூடிய அரசு தான் வேண்டும். அதனால் நிச்சயமாக ஒரு தீர்வு வரவேண்டும் என்பதே தேமுதிகவின் கோரிக்கை.

நீட் வேண்டாம் என்பது தமிழகத்தில் உள்ள எல்லோருடைய கருத்தாக உள்ளது. இந்தியா முழுவதும் நீட் உள்ளது. ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தும், ஒன்றும் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆளுங்கட்சி மக்களை குழப்பக்கூடாது. மற்ற மாநிலங்களைப் போல் தேர்வு இருக்கிறது என்று சொன்னால் கூட மாணவர்கள் படித்து தயாராகி விடுவார்கள். அதை விடுத்து விட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் .

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் பெண்களும் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் மாணவிகள் கலாச்சார சீரழிவில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்கள் பொறுப்புடன் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அதேசமயம் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

முதல்வரின் துபாய் பயணம் பல்வேறு சர்ச்சைகளை கொடுக்கிறது. சிலர் குடும்ப விழா என்கிறார்கள். அவர்களை கேட்டால் நாங்கள் தொழில் முதலீட்டுக்காகத்தான் சென்றோம் என கூறுகிறார்கள். எதுவாக இருந்தாலும் தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி இருப்பதை கண்டித்து அனைத்து மாநகராட்சிகளிலும் வருகிற 11ஆம் தேதி தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும். சொத்து வரி 25 சதவீதம் முதல் 50 சதவீதம் உயர்த்தலாம். ஆனால் ஒரேயடியாக 150 சதவீதம் என்பது ஒட்டுமொத்த மக்கள் தாங்க முடியாத ஒரு சுமைதான். ஏற்கனவே கொரோனாவால் வேலை வாய்ப்பு இல்லாதது, தொழில் நஷ்டம் என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். எல்லா பக்கமும் விலைவாசி உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போது அறிவித்த வரி உயர்வை அமல்படுத்திய பின்புதான் பாதிப்பு வெளிப்படும். பொறுத்திருந்து பார்ப்போம், என தெரிவித்தார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

19 minutes ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

50 minutes ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

2 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

2 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

2 hours ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

3 hours ago

This website uses cookies.