நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்த விவாதம் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரில் நடந்து வருகிறது.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது, ஏகே ராஜன் தலைமையிலான உயர்நிலை குழு பரிந்துரை குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்வி மற்றும் கருத்துக்களுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார்.
அவர் பேசியதாவது :- தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கிறார்கள். தனியார் பயிற்சி மையங்களில் வெற்றி பெறுவோர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நீட் விலக்கு மசோதா முன்பு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது சட்டப்பூர்வமானது. நீட் விலக்கு மசோதாவை பரிந்துரைத்த நீதியரசர் ஏகே ராஜன் குழு குறித்த ஆளுநர் தெரிவித்த கருத்து தவறானது. ஏகே ராஜன் குழு அறிக்கையின் அடிப்படையில் பரிந்துரை செய்யவில்லை.
ஆளுநர் தனது சொந்த கருத்துக்களை சுட்டிக்காட்டுவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மரபும் அல்ல. நீட் விலக்கு மசோதா குறித்த தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் மொத்த மதிப்பீடும் தவறானது.
சட்டப்பேரவையில் சட்டமே இயற்றக் கூடாது என்ற தீர்ப்பை ஆளுநர் மேற்கோள்காட்டினால் எப்படி ஏற்பது, எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவை பாஜக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பாக பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். அப்போது, இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்காவிட்டால், பாஜக உறுப்பினர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்யலாம் என்று அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.
இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாகக் கூறி பாஜக மீண்டும் வெளிநடப்பு செய்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.