பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பிற்பகல் மீண்டும் பதவியேற்கிறார்.
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து எதிர்கொண்டன. இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது. இருப்பினும், இருகட்சிகளிடையே கடந்த நாட்களாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன.
இதனால், பாஜக சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அம்மாநில ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் கடிதம் அளித்தார். இதைத் தொடர்ந்து, பாஜகவுடனான கூட்டணி முறிந்து விட்டதாகவும், ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
அதன்படி, பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும், மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார்.
இந்நிலையில், பாட்னாவில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார். துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்கிறார்.
இதனிடையே, நிதிஷ்குமார் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக பீகார் மாநில பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.