பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் அரசு, பெரும்பான்மை எம்எல்ஏ.,க்களின் ஆதரவுடன் வெற்றிப் பெற்றது.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறித்துக் கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கைகோர்த்தார். பின்னர், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், புதிய அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று நடைபெற்றது. மொத்தம் 243 எம்எல்ஏ.,க்களை கொண்ட பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில், 160க்கும் மேற்பட்டோர் நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளித்தனர்.
இதன் மூலம், ஏறக்குறைய வெற்றி உறுதியானது. இதனிடையே, சபாநாயகரான பா.ஜ.க,வின் விஜயகுமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி முன்னிலையில் நடந்த ஓட்டெடுப்பு நடந்தது.
இதைத் தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரின் வளர்ச்சிக்காக நாங்கள் (ஆர்ஜேடி மற்றும் ஜேடியு) இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம். 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர், என தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.