மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் நடைபெறும் வாரச்சந்தைகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிங்காடிகுண்டா, நந்திநகர், வெங்கடேஸ்வரா காலனி மட்டுமின்றி, பல பகுதிகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் மோமோஸ் சாப்பிட்ட சிங்காடிகுண்டா பகுதியை சேர்ந்த ரேஷ்மா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: மகன் இறந்தது கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற தம்பதி : சோக சம்பவம்!
இதனையடுத்து அவரது மகன் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் மோமோஸ் சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரேஷ்மா இறந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் அளித்ததால் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிந்து மோமோஸ் கடை நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.