சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒரு யூனிட் ஆற்று மணல் ரூ.13,600க்கு விற்பனையாவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மணல் குவாரிகள் சில மாதங்களாக இயங்காததால், அரசின் ஆன்லைன் திட்டத்தில் ஆற்று மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குவாரிகளை இயக்கி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்ய தமிழக அரசு புதிய விதிகளை வெளியிட்டது.
அரசின் புதிய விதிகளின்படி, 16 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு லாரிகளுக்கு ஒரு யூனிட் ஆற்று மணல் 1,000 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தொகையை மக்கள் ஆன்லைன் முறையில் செலுத்தி, அதற்கான லாரி விபரங்களை அளித்தால் குறிப்பிட்ட நேரத்தில் மணல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், சந்தை நிலவரப்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு யூனிட் ஆற்று மணல் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், 2.5 யூனிட் அடங்கிய ஒரு லோடு மணல் 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறுகையில், அரசு ஒரு யூனிட் மணல் விலை 1,000 ரூபாய் என நிர்ணயித்துள்ள நிலையில், தனியார் சிலர் அதே அளவு மணலை, 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கின்றனர். குவாரியில் இருந்து கட்டுமான பணி நடக்கும் இடம் வரையிலான போக்குவரத்து செலவு காரணமாக, இந்த விலை என்கின்றனர்.
இதனால், கட்டுமான செலவு வெகுவாக அதிகரிக்கும் என்பதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சராசரியாக, 50 கி.மீ., சுற்றளவுக்குள் மக்களுக்கு மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள், எந்தெந்த குவாரிகளில் இருந்து மணல் பெறலாம் என்பதையும், அரசு வரையறை செய்ய வேண்டும்.
அதேபோல, விற்பனை நிலையில், மணல் விலைக்கான உச்சவரம்பை அரசு நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் மணல் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.