ஜிகே வாசன், அன்புமணிக்கு மட்டும் தான் முக்கியமா…? திட்டமிட்டே புறக்கணித்ததா பாஜக..? அப்செட்டில் ஓபிஎஸ்..TTV!!

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்காதது பல்வேறு விவாதங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி கடந்த 14ம் தேதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பேரணியாக நடந்துச் சென்றனர். பிறகு மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக தேர்தல் அதிகாரியைச் சென்று சந்தித்தனர். மற்ற அனைவரும் வெளியே காத்திருந்தனர்.

இந்தப் பேரணியில் மோடியுடன் கூட்டணிக் கட்சித்தலைவர்களான ஜி.கே.வாசன், அன்புமணி, தேவநாதன் யாதவ், சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட ஏராளமானோர் சென்றனர். பின்னர், ஒவ்வொருவரும் பிரதமர் மோடியுடன் கைகுலக்கி வாழ்த்து சொல்லிய பிறகு, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். மோடி 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். அவர் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வல்லரசாக மலரும். உலகில் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் நம் நாடு மாறும்” என்று பேசினார்.

அடுத்து பேசிய ஜி.கே.வாசன், “பிரதமர் மோடியின் வேட்பு மனுத்தாக்கலுக்காக கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்திருந்தார்கள். ஆகவே வந்துள்ளோம். இது தமிழ்நாட்டுக்குப் பெருமை. ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசி வந்து பிரதமருடன் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, எனக் கூறினார்.

மேலும் படிக்க: வைகை அணை திறப்பு… 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!!

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், தமிழகத்தில் அவ்வளவு பிரபலமாகாத தேவநாதன் யாதவுக்கே அழைப்பு விடுக்கப்பட்டு, இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இந்த இருவர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

அன்புமணி, ஜி.ஜே.வாசன், தேவநாதன் யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டிருக்கையில், டிடிவி தினகரன், மட்டும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனாரா என்று ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் பாஜக இழுபறி காட்டியது. இதனால், வேறு வழியில்லாமல், சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டார். தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டுக்கு வந்த போது நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஓபிஎஸுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போதைய சம்பவமும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக டிடிவி தினகரன் கைகளில் ஒப்படைக்கப்படும் என்று கூறி வரும் நிலையில், தேசிய தலைமையோ, டிடிவி தினகரனை கண்டு கொள்ளாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.