சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் லாக்அப் மரணங்கள் எதிரொலியாக விசாரணை கைதிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது, தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும். குறிப்பாக காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவண்ணாமலையில் லாக் அப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட இருவர் மரணமடைந்த நிலையில் டிஜிபி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் விக்னேஷின் தாய் பரபரப்பு புகாரை அளித்திருந்தார். இதனால் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த இளையான்குன்னியை அடுத்த தட்டரணை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரை கடந்த 26ம் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீஸார் சாராயம் விற்பனை தொடர்பாக கைது செய்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்த தங்கமணி திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மதுவிலக்கு டிஎஸ்பி உள்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.