புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை கவிழ்க்க பாஜக சதி செய்கின்றது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த நான்கு மாதத்திற்கு பிறகு புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை 100ஐ தாண்டி விற்பனையாகின்றது.இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையுர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து எல்லையம்மன் கோயில் வீதியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இரண்டு சக்கர வாகனத்தை மாலை அணிவித்து சவப்பாடையில் ஏற்றி வைத்தும், சாலையில் விறகு மூட்டி அடுப்பு அமைத்தும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி இன்று புதுச்சேரியில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. தினமும் பெட்ரோல் விலையை மோடி அரசு ஏற்றி வருகிறது.நாட்டு மக்களை வஞ்சிக்கின்ற மத்திய அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த 7 வருடங்களில் 26 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை மத்திய அரசு ஈட்டியிருக்கின்றது.முதலமைச்சர் ரங்கசாமியை எப்போது கவிழ்பது என்பது குறித்தான சதி வேலையில் தான் புதுச்சேரி பா.ஜ.க. ஈடுப்பட்டு வருகிறது, எனவும் தெரிவித்தார்.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.