முதலமைச்சர் ரங்கசாமியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி… முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
31 March 2022, 1:50 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை கவிழ்க்க பாஜக சதி செய்கின்றது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த நான்கு மாதத்திற்கு பிறகு புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை 100ஐ தாண்டி விற்பனையாகின்றது.இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையுர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து எல்லையம்மன் கோயில் வீதியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இரண்டு சக்கர வாகனத்தை மாலை அணிவித்து சவப்பாடையில் ஏற்றி வைத்தும், சாலையில் விறகு மூட்டி அடுப்பு அமைத்தும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி இன்று புதுச்சேரியில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. தினமும் பெட்ரோல் விலையை மோடி அரசு ஏற்றி வருகிறது.நாட்டு மக்களை வஞ்சிக்கின்ற மத்திய அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த 7 வருடங்களில் 26 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை மத்திய அரசு ஈட்டியிருக்கின்றது.முதலமைச்சர் ரங்கசாமியை எப்போது கவிழ்பது என்பது குறித்தான சதி வேலையில் தான் புதுச்சேரி பா.ஜ.க. ஈடுப்பட்டு வருகிறது, எனவும் தெரிவித்தார்.

Views: - 1188

1

0