புதுச்சேரி : ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இளைய சமுதாயத்திற்கு காஷ்மீர் குறித்த உண்மை தற்போது தெரியவந்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள திரையரங்கில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர் வல்லவன், காவல்துறை டிஜிபி சந்திரன், ஏடிஜிபி அனந்த மோகன், அரசு அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
முழுமையாக திரைப்படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “காஷ்மீரில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே தெரியும் அளவிற்கு இந்த திரைப்படம் அமைந்துள்ளது. சொந்த நாட்டில் காஷ்மீர் பண்டிட்கள் அகதிகளான கதை என்பது அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் இளைய சமுதாயத்திற்கு காஷ்மீர் குறித்த உண்மை தெரியவந்துள்ளது,” என்றார். மேலும் இத்திரைப்படத்தை கனத்த இதயத்தோடு பார்த்ததாகவும் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.