தமிழக அரசியல் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் கேப்டனுக்கு கிடைத்துள்ளதாக மறைந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்பிறகு, தமிழக அரசு, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- கேப்டனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டனின் இறுதி ஊர்வலம் நடக்க உறுதுணையாக இருந்த போலீசாருக்கு ராயல் சல்யூட். அதேபோல, வழிநெடுகிலும் திரண்டு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசியல் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் கேப்டனுக்கு கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக நமக்கு கிடைத்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்க காரணம், கேப்டன் செய்த தர்மமும், அவரது எண்ணமும், மக்களுக்கு உதவும் குணமும் தான்.
ராகுல் காந்தி தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார். கேப்டன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை அவருடனே வைத்து நல்லடக்கம் செய்து விட்டோம். மெரினாவில் எப்படி அரசியல் தலைவர்களுக்கு சமாதி இருக்கிறதோ, அதைப்போல, கேப்டனுக்கு சமாதி அமைக்கப்படும். 24 மணிநேரம் விளக்கு எரியும். தினமும் பூஜை செய்து கோவில் போல பராமரிப்போம். அவர் சொர்க்கத்தில் இருந்து நம்மை வாழ்த்தி கொண்டுதான் இருப்பார், எனக் கூறினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.