சென்னை : சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுரை பள்ளி மாணவன் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிகட்டில் தொங்குவதை சாகசமாக நினைத்து வருகின்றனர். இதன் விபரீதத்தை உணராத அவர்கள், அதனைக் கண்டிப்பவர்களை ஏளனப்படுத்துவதும், அவமானப்படுத்துவம் கூட நடந்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் அத்துமீறி செய்த செயல் அரசுப் போக்குவரத்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயிலை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் என்பவர், கொட்டூரில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சில தனியார் பள்ளி மாணவர்கள் படிகட்டில் தொங்கியபடியும், பேருந்தின் மேல் ஏறியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் காளிதாஸ் போக்குவரத்து போலீசாரிடம் முறையிட்டுள்ளார்.
அதன்பேரில், அட்டகாசம் செய்த பள்ளி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர், அதே பேருந்து பெரம்பூர் பேரக்ஸ் வழியாக வந்து கொண்டிருந்த போது, 4 மாணவர்கள் பேருந்தில் ஓடி வந்து ஏறினர். அப்போது, தினேஷ்(19) என்ற மாணவன், போலீஸில் புகார் அளித்த ஓட்டுநர் காளிதாஸின் கன்னத்தில் இரு முறை அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும், 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட கீழ்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன், மாணவர் தினேஷை கைது செய்தார். மேலும் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்களின் மகன் உட்பட 3 சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.