தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. ஒரே மேடையில் ராகுல், முதலமைச்சர் ஸ்டாலின் : எந்த தொகுதியில் தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வருகை தருகின்றனர்.
அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தமிழ்நாட்டில் வரும் 12-ந் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இன்று வயநாடு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து வரும் 12-ந் தேதி தமிழ்நாடு வருகை தரும் ராகுல் காந்தி, நெல்லை மற்றும் கோவையில் பிரசாரம் செய்கிறார். கோவையில் திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட தேர்தல் பொதுக் கூட்டம் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார். இத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்யவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.