சென்னை ; சென்னையில் மழைநீரை அகற்றாமல், அப்படியே கான்கிரீட் கலவையை கொட்டி, மழைநீர் வடிகால் கட்டிய அவலம் நடைபெற்றுள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை 36வது வார்டு புருஷோத்தம நகரின் 3வது தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென மழை பெய்ததால், மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வெள்ளம் தேங்கி நின்றது.
இதனால், கான்கிரீட் போடுவதற்காக தயார் செய்யப்பட்ட கலவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இதனை சற்றும் பொருட்படுத்தாத ஊழியர்கள், கான்கிரீட் கலவையை தேங்கிய மழைநீரில் கொட்டி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தனர்.
முழங்கால் அளவு தண்ணீரில் சிமெண்ட் கலவையை எதற்காக கொட்டுகின்றனர் என்ற சந்தேகமும், கேள்வியும் அங்கிருந்த பொதுமக்களிடையே எழுந்தது. ஒருசிலர் என்னதான் நடக்கிறது என்பதை அங்கு பொறுத்திருந்து கவனித்தனர். அப்போது தான் தெரிந்தது, மழைநீரில் கலவையை கொட்டி, மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறுவது.
மழை தண்ணீரில் கலவையை கொட்டி கான்கிரீட் அமைத்தால் தரமானதாக இருக்குமா..? என்ற எந்த எண்ணமும் எழாமல் ஒப்பந்ததாரரின் உத்தரவின் பேரில், காரணமே இல்லாமல் கலவையை ஊழியர்கள் கொட்டிக் கொண்டிருந்தனர்.
தண்ணீருக்குள் கலவையை கொடி வீணடித்த அதே வேகத்தில் தண்ணிருக்குள் தரைதளம் செட்டாகி விட்டது போல, பலகையை கொண்டு பக்கவாட்டு கான்கிரீட் சுவர் அமைப்பதற்காக தண்ணீருக்குள் பலகைகளையும் இறக்கினர். இதனை கண்ட பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரவச் செய்தனர்.
இந்த விஞ்ஞான கால்வாய் பணிகளை தடுக்க தவறிய இளநிலை பொறியாளர் வெங்கடேசன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.