நாம் இந்தியர் என்கிற பெருமையோடு, அனைவரும் தேசிய கொடியேற்றி, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதனை மத்திய அரசு உற்சாகமாகக் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இல்லந்தோறும் மூவர்ணக் கொடியை பறக்க விட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
அதனை ஏற்று, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தேசிய கொடியை ஏற்றி, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா பிரபலங்களில் முதல் நபராக நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டு வாயிலில் தேசியக் கொடியை பறக்க விட்டார். அதேபோல், நடிகர் விஜய்யும், தனது மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டிருந்தார்.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை மக்கள் ஏற்றுவதன் அவசியம் என்ன என்பது குறித்தும், மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தும் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியதாவது :- இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக, நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருஷங்கள், பல லட்சம் பேர், எவ்வளவோ சித்திரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவிச்சிருக்காங்க. எத்தனையோ பேர் அவர்களது உயிரையே தியாகம் பண்ணிருக்காங்க.
அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ந் தேதி, ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, ஒரு 2 அல்லது 3 அடி நீளம் கொண்ட கம்பில் நமது நாட்டின் தேசிய கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால நம் வீட்டின் முன் அந்த கொடியை பறக்கவிட்டு, நாம் பெருமைகொள்வோம். நாடு இல்லைன்னா நாம இல்ல, நாம் எல்லாரும் இந்தியர்கள் என்று பெருமைகொள்வோம். ஜெய் ஹிந்த்” என கூறினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.