திராவிட மாடலை அழிக்க வந்தவரே ஆர்என் ரவி தான் : ஹெச் ராஜா பரபரப்பு பேச்சு!!!

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தேவையின்றி பதற்றத்தை அமைச்சர் சேகர் பாபு ஏற்படுத்துகிறார். அவரை ஆள்கடத்தல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்ய வேண்டுமென பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ‘’திராவிட தீயச்சக்திகள் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதே கிடையாது, இவர்களுக்கு ஒரு பெரிய அரிப்பு உள்ளது. நல்ல நடந்துக் கொண்டிருக்கும் நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டும். அப்படி எண்ணித்தான் 2007-ம் ஆண்டு தில்லை சிற்றம்பலம், அப்போதைய முதல்வர் கருணாநிதி அரசு அபகரிக்க நினைத்தது. அதற்கு எதிராக அப்போது நீதிமன்றம் சென்ற போது அரசாங்கத்திடமே கேளுங்க என திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

சிதம்பரம் கோயில் மன்னர்களால் கட்டப்பட்டது என்கிறார்கள். அப்படி என்றால் அந்த கோயிலில் ஆள் கடத்தல் அல்லோலுயா சேகர்பாபுவுக்கு என்ன வேலை? சிதம்பரம் கோயிலை கட்டியது தீட்சிதர்கள் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஆனால், இன்றைக்கு அவர்களே, மன்னர்கள் கட்டினார்கள் என மாற்றிப் பேசுகிறார்கள்.

இந்த கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது என பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆங்கிலேயர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது. பிராமணர்களில் பல பிரிவுகள் இருக்கிறது. அதெல்லாம் இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் பெரியாரே எனக்கு படிக்காத இந்த முட்டாள்கள் தான் வேணும் எனக் கேட்கிறார். அதையெல்லாம் மீறி இவர்கள் கையகப்படுத்த நினைக்கிறார்கள் ஆனால், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.

உங்களுக்கு இடமில்லை என தெளிவாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அதில் எல்லாம் உண்டியல் வைத்து கொள்ளை அடிக்கிறார்கள். இவர்கள் எனக்கு பதில் சொல்லட்டும். அறம் கெட்ட இந்து சமய அறநிலையத்துறை, சிதம்பரம் நடராஜரை அழிப்பதற்காக இந்த ஆள்கடத்தல் சேகர் பாபு வந்துள்ளார். குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நபரை கடத்தி 60 நாள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இதுதொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபியிடம் புகார் அளித்து சேகர்பாபுவை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்த உள்ளேன். இதற்கு முன்பு டிஜிபியாக ஒருத்தர் இருந்தார். அவர் சைக்கிளில் சென்று செல்ஃபி எடுப்பதற்கு மட்டுமே வேலையாக செய்து வந்தார். இப்போது புதிதாக வந்து இருப்பவர் சும்மா இருந்துவிடக் கூடாது. அதனால் அவருக்கு கொஞ்ச வேலைக் கொடுக்க வேண்டும்.

எந்தவிதமான கட்டணக் கொள்ளையும் இல்லாத கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில். இந்த மாதிரியான கோயிலை தமிழகத்தில் வேறு எங்கையும் பார்க்க முடியாது. இந்த கோயிலை அழிக்க வேண்டுமென திட்டமிட்டு திமுக அரசாங்கம் செயல்படுகிறது. கோயில் பணத்தில் சாப்பிட வேண்டுமென இந்த தரம்கெட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள்” என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

15 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

15 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

16 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

17 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

17 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

18 hours ago

This website uses cookies.