மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு முதல் கட்டமாக ரூ.1,627 கோடியை ஜப்பான் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வேறொரு இடத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு முதல் கட்டமாக ரூ.1,627 கோடியை ஜப்பான் நிறுவனம் ஒதுக்கி உள்ளது. இதன்படி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்த திட்ட மதிப்பான ரூ.1,977 கோடி என திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.1,627 கோடியை ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மீதி தொகை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், தோப்பூரில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.