வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முடிந்து செல்லும் முன்பாக வகுப்பறையில் உள்ள மேசைகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்க உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளி விடப்பட்டுள்ளது.
ஆனால் 12-ம் வகுப்பு C பிரிவை சேர்ந்த மாணவர்கள் சிலர் வீட்டுக்கு செல்லாமல் வகுப்பறையிலேயே அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் வந்து வீட்டுக்கு செல்லும் படி அறிவுறுத்தியும், அதை சற்றும் பொருட்படுத்திடாத மாணவர்கள் வகுப்பறையில் உள்ள இரும்பு மேசைகளை உடைத்தெரிந்துள்ளனர்.
பின்னர் பாகாயம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த காவலர்களை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களின் ஒழுங்கீனமான செயல்கள் அரங்கேறி வருவது வருங்களா இளய சமுதாயத்தின் மீது கேள்விக்குறியை எழுப்புகிறது. மேலும் இதற்கு முதல்படியாக பெற்றோர்கள் மாணவர்களை கண்காணிப்பானது இன்றை கால கட்டத்தில் முதல் கட்டாயமாகவும், ஆசிரியர்களுக்கு தகுந்த சுதந்திரம் அளிப்பது இரண்டாம் கட்டாயமாகவும் உள்ளதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பள்ளியில் ஆசிரியர்களை மாணவர்கள் கிண்டலடிப்பதும், அவமதிப்பதும் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது, பள்ளிச் சொத்துக்களை சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்புடைய 10 மாணவர்களை இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.