சீமான் எங்களோடு இணைந்து கொள்ளலாம்… உருவாகிறதா புதிய கூட்டணி? ஹெச் ராஜா வைத்த ட்விஸ்ட்!!!

சிவகங்கையில் நடந்த தனியார் அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், அரசு நலத்திட்டங்களை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஹெச் ராஜா தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது, சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம், சீமான் எனப் பல விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

அவர் அங்கே பேசுகையில், சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பொய்யாக வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அறநிலையத்துறை அங்குச் செல்லவே அதிகாரமில்லை. சட்ட திட்டங்கள் தெரிந்து நடக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலுக்குள் அதிகாரிகள் எப்படிச் செல்ல முடியும். இந்த சட்டங்கள் குறித்து அறியாதவர் அமைச்சராக இருப்பதே இதற்குக் காரணம் என்று அமைச்சர் சேகர்பாபுவை விமர்சித்துப் பேசினார்.

தொடர்ந்து காங்கிரஸ் பக்கம் திரும்பிய அவர், “இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் ப. சிதம்பரம்.. அவர் பற்றி எல்லாம் பேசத் தேவையில்லை.

2014 ஆண்டில் மட்டும் மோடி ஆட்சியைப் பிடிக்க வில்லை என்றால் இந்தியா மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். பாஜகவை பொறுத்தவரை இங்கே மோடி தான் பிரதமர் வேட்பாளர். ஆனால், பீகாரில் ஏதோ எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தியதாகச் சொல்கிறார்கள். அங்கே பிரதமர் வேட்பாளர் யார் என்று அட்டாக் மோடிற்கு சென்றார்..

தொடர்ந்து பேசிய அவர், சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது. அதைத் தாண்டி எம்ஜிஆர், ஜெயலலிதா போல மக்களுக்காக இறங்கி வேலை பார்த்திருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வென்றார்கள் என்பதற்காகவே சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து அனைவரும் வெல்ல முடியாது.

இதற்குச் சிவாஜி, டிஆர், பாக்கியராஜ் என பல உதாரணங்கள் உள்ளன. இருந்தாலும் அவருக்கும் அரசியலுக்கு உரிமை இருக்கிறது.

சீமான் பேசும் பல விஷயங்களை நான் அவருக்கு முன்பே பேசியுள்ளேன். அவர் டிவி நிகழ்ச்சியை நடத்தினாரே.. அப்போதே அதில் நான் கலந்து கொண்டு இருக்கிறேன். இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. அவர் பாஜகவை வரவேற்கிறேன் என்றே குறிப்பிட்டுள்ளார்.

சீமான் தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் நெருங்கி வரலாம். தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதம், இந்தியத் தேசியம் என்பதே ஒற்றுமை. இதை அவர் உணர வேண்டும். இதைத் தவிர்த்துப் பார்த்தால் இருவரும் நல்ல நண்பர்கள் தான். அவரும் திராவிடத்தை ஏற்கவில்லை.. நாங்களும் ஏற்கவில்லை.

நாம் தனியாக இருந்தாலும் எதையும் செய்ய முடியாது சீமான் பகுத்தறிவோடு சிந்தித்து தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் வரவேற்போம். அதன் பிறகு அடுத்த கட்ட விஷயங்கள் குறித்துப் பேசலாம் என்று அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

1 hour ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

2 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

2 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

2 hours ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

3 hours ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

3 hours ago

This website uses cookies.