சிவகங்கை: மெரினா கடலில் பேனா சிலையை வைக்க திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- மெரினா கடலில் பேனா சிலை அமைப்பதை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் கருத்தை வரவேற்கின்றேன். கடல் கட்சிக்கோ, கட்சியின் தலைமைக்கோ சொந்தமானது அல்ல. கடல் பொது சொத்து.
கடலுக்குள் சிலை அமைப்பதை அறிவார்ந்த சமுகம் செய்யாது. தொலை நோக்கு பார்வையுள்ள தலைவன் சிந்திக்க வேண்டும். பேனா சிலையை அண்ணா அறிவாலயம், அண்ணா நூலகம், கலைஞர் நினைவிட்டத்தில் வைக்கலாம். கடலுக்குள் வைப்பதை அனுமதிக்க மாட்டோம்.
எனது கை பூ பறிக்குமா? புலியங்காய் பறிக்குமா? என்று சேகர் பாபு பழைய வசனங்களை பேசி வருகின்றார். ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் வலிமையாக எதிர்கொள்கின்றோம். உறுதியாக வெல்வோம்.
இலங்கை அகதிகள் மீண்டும் இந்தியா வருவது அங்கு தமிழர்கள் வாழமுடியாத சூழல் நிலவுவதை காட்டுகின்றது. திபத்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் அரசு, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர மறுக்கின்றது. இலங்கை பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழ சோசியலீச குடியரசு மலர்வது தான் ஒரே தீர்வு, என தெரிவித்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.