சிவகங்கை: மெரினா கடலில் பேனா சிலையை வைக்க திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- மெரினா கடலில் பேனா சிலை அமைப்பதை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் கருத்தை வரவேற்கின்றேன். கடல் கட்சிக்கோ, கட்சியின் தலைமைக்கோ சொந்தமானது அல்ல. கடல் பொது சொத்து.
கடலுக்குள் சிலை அமைப்பதை அறிவார்ந்த சமுகம் செய்யாது. தொலை நோக்கு பார்வையுள்ள தலைவன் சிந்திக்க வேண்டும். பேனா சிலையை அண்ணா அறிவாலயம், அண்ணா நூலகம், கலைஞர் நினைவிட்டத்தில் வைக்கலாம். கடலுக்குள் வைப்பதை அனுமதிக்க மாட்டோம்.
எனது கை பூ பறிக்குமா? புலியங்காய் பறிக்குமா? என்று சேகர் பாபு பழைய வசனங்களை பேசி வருகின்றார். ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் வலிமையாக எதிர்கொள்கின்றோம். உறுதியாக வெல்வோம்.
இலங்கை அகதிகள் மீண்டும் இந்தியா வருவது அங்கு தமிழர்கள் வாழமுடியாத சூழல் நிலவுவதை காட்டுகின்றது. திபத்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் அரசு, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர மறுக்கின்றது. இலங்கை பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழ சோசியலீச குடியரசு மலர்வது தான் ஒரே தீர்வு, என தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.