காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஓட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியின் போது 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள தனியார் விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ரங்கநாதன், நவின்குமார், திருமலை ஆகிய 3 பேர் உள்ளே இறங்கி உள்ளார். அப்போது, விஷவாயு தாக்கியதில் மூவரும் உள்ளேயே மயங்கி விழுந்தனர்.
கழிவுநீர் தொட்டிக்கு வெளியே இவர்களின் உடைகள் மட்டும் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள், உள்ளே எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது, 3 பேர் மூச்சு பேச்சில்லாமல் உள்ளே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போலீசார் உதவியுடன் கழிவுநீர் தோட்டியில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 3 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், சடலமாகவே மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 3 பேர் உயிரிழந்த தனியார் விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், விடுதியின் மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.