காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஓட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியின் போது 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள தனியார் விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ரங்கநாதன், நவின்குமார், திருமலை ஆகிய 3 பேர் உள்ளே இறங்கி உள்ளார். அப்போது, விஷவாயு தாக்கியதில் மூவரும் உள்ளேயே மயங்கி விழுந்தனர்.
கழிவுநீர் தொட்டிக்கு வெளியே இவர்களின் உடைகள் மட்டும் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள், உள்ளே எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது, 3 பேர் மூச்சு பேச்சில்லாமல் உள்ளே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போலீசார் உதவியுடன் கழிவுநீர் தோட்டியில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 3 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், சடலமாகவே மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 3 பேர் உயிரிழந்த தனியார் விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், விடுதியின் மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.