விருதுநகர் : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் திட்டியதாகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்சேர்த்தல், நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது வைக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்தியா முழுவதும் 23 மாநிலங்களில் பிஎஃப்ஐக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பிஎஃப்ஐ அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இதற்க்கு விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி சாலையில் வசித்து வரும் ஓட்டுநரான நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி விக்னேஸ்வரன் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி நிர்வாகியான விக்னேஷ்வரனுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
விக்னேஸ்வரனிடம் இருந்து விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புத்தகங்கள் கையேடுகளை கைப்பற்றினர். சோதனையில் சில முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பிஎப்ஐ அமைப்பினர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய பரபரப்பு அடங்குவதற்குள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் தேசிய புலானய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.