நீச்சல் குளத்தில் குளித்தும்… கார்களை எடுத்து ஓட்டியும் போராட்டக்காரர்கள் ரவுசு… இலங்கை வெடித்த பிரளயம்.. கப்பலில் தப்பியோடிய கோத்தபய?

கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்சே கப்பல் மூலம் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசல், பெட்ரோல் வாங்க பல கி.மீ., தூரம் மக்கள் வரிசையாக காத்து கிடந்தனர். இதனையடுத்து, இதையடுத்து, மக்களின் போராட்டத்தால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சராக இருந்த அவரது மகன் உள்ளிட்ட பலரும் பதவி விலகி தப்பியோடினர். நிலைமையை சமாளிக்க புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். ஆனால், அதிபர் கோத்தபயா மட்டும் பதவி விலக மறுத்து வந்தார்.

இருப்பினும், பொருளாதார நெருக்கடி தீராததால், கோத்தபயாவும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதற்காக பஸ்கள், ரயில்கள் மூலம் ஆயிரகணக்கானோர் தலைநகர் கொழும்புவில் கூடினர். அவர்கள் ஒன்று சேர்ந்து அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பாதுகாப்பு படையினர் வீசினர்.

ஆனால், அதனையும் தாண்டி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து அதனை கைப்பற்றி உள்ளே நுழைந்தனர். அப்போது, அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய ஆம்புலன்ஸ் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தும், அதிபருக்கு சொந்தமான சொகுசு கார்களை எடுத்து ஓட்டியும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேவேளையில், கோத்தபய ராஜபக்சே, தனது உடமைகளை எடுத்துக் கொண்டு கப்பலில் தப்பிச் செல்வது போன்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உண்மையில் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகாத நிலையில், அவர் விமானம் தப்பிச் சென்றுவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

போராட்டத்தால் இலங்கையே ஸ்தம்பித்து வரும் நிலையில், இலங்கை – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் மைதானத்தை சுற்றி வலம் வருவதும், இதனால், கிரிக்கெட் வீரர்கள் சில நிமிடங்கள் போட்டியை நிறுத்தியது போன்ற வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பதவியை ராஜினாமா செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

1 hour ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

2 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

2 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

3 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

4 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

5 hours ago

This website uses cookies.