எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்த ஸ்டாலின் கனவு பலிக்காது : மரக்காணம் விழாவில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!!

விழுப்புரம் : கட்சியில் உள்ள எட்டபர்களை முகத்திரை தற்பொழுது கிழிக்கபட்டுள்ளது என மரக்காணம் விழாவில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் அவர்களின் இல்ல காதணி விழாக்கு வருகை புரிந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காதணி விழாவில் குழந்தைகளை வாழ்த்தினார்.

விழாவிற்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி ஆர்பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்சி சம்பத், விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ச்சுனன், குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் விழா மேடையில் எடபாடி பழனிசாமி பேசியதாவது : நான் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி. நான் அதிமுக பொதுச்செயலாளர் ஆவேன் என நினைத்துகூட பார்க்கவில்லை இருபெரும் தலைவர்களும் பல்வேறு இன்னல்களை கடந்து வெற்றி அடைந்து நம்மிடம் இந்த கட்சியை கொடுத்துள்ளனர்.

அதிமுக பல்வேறு சோதனைகளை கடந்து வந்திருக்கிறது. நம்மிடத்தில் எட்டப்பராக இருந்தவர்கள் முகத்திரை தற்பொழுது கிழிக்கபட்டு விட்டது. அவர்கள் இதுநாள் வரை நம்முடன் இருந்து கட்சியை வலுவிழக்கச் செய்துள்ளார்கள்.

நாம் 2021 ல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது. நம்மோடு இருந்தவர்கள் தான் எட்டப்பர் வேலை சூழ்ச்சி செய்து கொண்டு வெற்றி தடுத்தவர்கள்.

இன்றையதினம் இந்த கட்சியை இழக்க பார்க்கிறார்கள். எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அதிமுக தொண்டர்கள் உழைத்து உருவாக்கிய கட்சி அதிமுக கட்சி.

ஸ்டாலின் அவர்களே எங்களுடன் இருக்கும் எட்டப்பர்களை வைத்து அதிமுக விழ்த்த நினைத்தால் இனி அது நடக்காது என அவர் பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

11 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

11 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

12 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

13 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

13 hours ago

This website uses cookies.