விருத்தாச்சலம்: அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையை பள்ளி சீருடையணிந்த மாணவன் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி ரேகா (வயது 42) விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவரின் வீடு பள்ளிக்கூடம் அருகேயே இருப்பதால், தினமும் பள்ளிக்கு நடந்தே வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த ஆசிரியை ரேகா, மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு மீண்டும் நடந்து வந்துகொண்டு இருந்த நிலையில், பள்ளி சீருடையணிந்த மாணவன் ஒருவன் நடுரோட்டில் வைத்து ஆசிரியையின் தலையில் பேனா கத்தியால் 3 முறை வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த ஆசிரியை கூச்சலிடவே, பதறிப்போன அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.
இதனைக்கண்ட மாணவன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், ரேகாவை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆசிரியைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் பள்ளிக்கு அருகிலேயே ஆசிரியையை மாணவன் ஒருவர் கத்தியால் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
This website uses cookies.