நாகர்கோவில் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் சுப்புலட்சுமி என்பவர் பொறுப்பு சார்பதிவாளராக பணிபுரிகிறார். பத்து மாதங்களுக்கு முன், தோவாளை சார்பதிவாளர் மேகலிங்கம் விடுப்பில் சென்றார்.
அதனால் அவரது பணிகளை கவனிக்க சுப்புலட்சுமி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார்.அவர் தலைமையில் பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி நிலுவையில் இருந்த நிலம் தொடர்பான பத்திரங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டன. மறுநாள் பணிக்கு வந்த சார் பதிவாளர் மேகலிங்கம், இதுதொடர்பாக எஸ்.பி.சுந்தரவதனத்திடம் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரித்தனர்.விசாரணையில் மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் தனராஜா, 50, உதவியுடன் சார் பதிவாளர் சுப்புலட்சுமி இப்பத்திரங்களை முறைகேடாக பதிவு செய்தது தெரிய வந்தது மேலும் சார்பதிவாளரின் பெயரில் உள்ள லாக் இன் ஐடி மூலம் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முறைகேடாக ஐடி மூலம் முறைகேடு செய்த சுப்புலட்சுமி அதே அலுவலகத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் தன்ராஜ், நம்பிராஜ் ஒப்பந்த பணியாளர்களான டெல்பின்,ஜெயின் ஷைலா ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி உள்ள சுப்புலட்சுமி ஆறு மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.