கணவரின் விமர்சனத்தால் எழுந்த சர்ச்சை.. திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

1972ல் தனது அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, 1977 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய எம்ஜிஆர், அவர் வெற்றி பெற்றதும் ஜவுளித் துறை அமைச்சராகவும் நியமித்து எதிர்காலத்தை ஒளிமயமாக்கினார். ஆனால் 1980ல் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டபோது அவர் எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கினார்.

திமுகவில் சேர்ந்த பிறகு எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் வெற்றி பெற்று தன்னை கட்சியில் வலுப்படுத்தியும் கொண்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜக வேட்பாளர் சி.ஆர்.சரவஸ்வதியுடம் தோல்வியடைந்தார். சுப்புலட்சுமி வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் சட்டப்பேரவை சபாநாயகர் என திமுக வட்டாரங்கள் கூறி வந்தன.

ஆனால் அவர் தோல்வியடைந்த நிலையில், எம்பி சீட் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அதையும் திமுக கொடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் திமுகவுக்கு எதிராக காட்டமான விமர்சனங்களை சமூக வைலதளங்களில் பதிவு செய்தார்.

அதுதான் அவருடைய கொந்தளிப்புக்கு முக்கிய காரணம் என்று கூறும் திமுகவினர் கட்சித் தலைமைக்கு கண்டனக் கணைகளை குவித்தும் வருகின்றனர். திமுகவினரே திமுகவை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுப்புலட்சுமியோ தனது கணவரின் அதிரடி நடவடிக்கையால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வந்தார்.

இது ஒருபுறமிருக்க விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை சுப்புலட்சுமி ஜெகதீசன் புறக்கணித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சி தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளாராம். ஆனால் தலைமையோ இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது என்கிறார்கள். இது குறித்து திமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.