குடும்பக் கட்டுப்பாடு செய்த இளம்பெண் திடீர் மரணம் : அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!!

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த இளம்பெண் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வினோதினி (வயது 30). இவர்களுக்கு சோனியா (வயது 5) என்ற மகளும், மோனிஷ் (வயது 3) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 30-ந் தேதி வினோதினி, சின்னபோரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொண்டார்.

2 நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் வினோதினிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் மீண்டும் நகர்ப்புற சமுதாய நல ஆஸ்பத்திரிக்கு சென்றார். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் திடீரென வினோதிபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வினோதினியின் உறவினர்கள், அரசு டாக்டர்களின் கவனக்குறைவாலும், தவறான சிகிச்சையாலும்தான் வினோதினி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்களிடமும் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். அதேநேரத்தில் சின்னபோரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல ஆஸ்பத்திரியிலும் வினோதியின் உறவினர்கள் சிலர் அங்கிருந்த டாக்டர்கள், ஊழியர்களிடமும் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போரூர் போலீசார் சமாதானம் செய்து அனைவரையும் கலைந்து போக செய்தனர். இந்தநிலையில் வளசரவாத்தில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, “இளம்பெண் வினோதினி உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளோம். அதில் தவறு நடந்து இருப்பது தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

10 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

11 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

11 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

12 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

13 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

13 hours ago

This website uses cookies.