சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜிவ் வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் பேரறிவாளன் உடல்நிலையைக் காரணம் காட்டி அடிக்கடி பரோலில் வந்து செல்கிறார்.
இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டி, கடந்த அதிமுக ஆட்சியின் போது, சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானம் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி ஆணையிட்டனர்.
இதன்மூலம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் முதல் நபருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பேரறிவாளனின் வழக்கறிஞர் சங்கரநாராயணனின் துணை வழக்கறிஞர் பிரபு, பேரறிவாளனைத் தொடர்ந்து மற்ற 6 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுதாவது :- பேரறிவாளனுக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு நடுநிலையோடு வாதிட்டது. காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய கோட்சேவுக்கு கருணை கொடுக்கும் போது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை காட்டக் கூடாதா..? இந்த வழக்கி மத்திய அரசு சட்டத்தையே மாற்ற பார்க்கிறது.
இறுதி விசாரணை முடியும் வரை பேரறிவாளனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆளுநர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். பேரறிவாளனை தொடர்ந்து, மற்ற 6 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் 7 பேரின் வழக்கும் ஒரே மாதிரியானது. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு 7 பேருக்கும் பொருந்தக் கூடியது. ஆனால், மற்ற 6 பேரும் தனித்தனியே மனு போட வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பிருக்காது.
ஏனென்றால், இந்த வழக்கில் அடுத்த மாதமே இறுதி விசாரணை வைத்துள்ளனர். அதில், 7 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது. மாநில அரசின் முடிவை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மத்திய அரசின் அனைத்து வாதங்களும் நிராகரிக்கப்பட்டன, என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.