பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பேசி வருவதாக பிரபல நடிகையின் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் கட்சி வலுப்பெற்று வருவதாக எதிர்கட்சியினரே கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருப்பதாக கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்து கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.
அதுபோன்று வெளியேறியவர்தான் பிரபல நடிகை காயத்ரி ரகுராம். பாஜகவில் இருந்து வெளியேறியது முதல் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வரும் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.