ரொம்ப ஓவராப் போறீங்க… பொறுமையை இழந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் : காயத்ரி ரகுராமுக்கு வைத்த செக்!!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 2:04 pm
Quick Share

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பேசி வருவதாக பிரபல நடிகையின் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் கட்சி வலுப்பெற்று வருவதாக எதிர்கட்சியினரே கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருப்பதாக கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்து கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.

அதுபோன்று வெளியேறியவர்தான் பிரபல நடிகை காயத்ரி ரகுராம். பாஜகவில் இருந்து வெளியேறியது முதல் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வரும் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

Views: - 223

0

0