தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, பச்சரிசியை கிலோவுக்கு ரூ.32ம், சர்க்கரையை கிலோவுக்கு ரூ.40ம், முழு கரும்புக்கு ரூ.33ம் கொடுத்து கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 கோடியே 19 லட்ச ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்தப் பரிசு தொகுப்புகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பரிசு தொகுப்பில் ரொக்கப்பரிசு இல்லாமல் அறிவிப்பு வெளியாகியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.