தஞ்சை அருகே வேலை முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல பணி முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த பக்கத்து ஊரான மேட்டுபட்டியை சேர்ந்த கொடிஅரசன் என்ற இளைஞர், பெண்ணை அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விடுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும் கொடி அரசனுடன் வாகனத்தில் சென்றுள்ளார்.
ஆனால், அந்த இளம்பெண்ணை ஏமாற்றி, அருகே இருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கொடி அரசன் தனது நண்பர்களான தமிழரசன், சுகுமாரன், கண்ணன் உள்பட 5 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் செய்துள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வல்லம் டிஎஸ்பி பிருந்தா விசாரணை செய்து, கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணும், வேலூரில் பெண் மருத்துவரும், அம்பத்தூர் 13 வயது சிறுமியையும் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவங்கள் இதற்கு உதாரணமாகும். எனவே, பலாத்கார குற்றங்களை தடுத்து நிறுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.