தஞ்சை அருகே வேலை முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல பணி முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த பக்கத்து ஊரான மேட்டுபட்டியை சேர்ந்த கொடிஅரசன் என்ற இளைஞர், பெண்ணை அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விடுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும் கொடி அரசனுடன் வாகனத்தில் சென்றுள்ளார்.
ஆனால், அந்த இளம்பெண்ணை ஏமாற்றி, அருகே இருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கொடி அரசன் தனது நண்பர்களான தமிழரசன், சுகுமாரன், கண்ணன் உள்பட 5 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் செய்துள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வல்லம் டிஎஸ்பி பிருந்தா விசாரணை செய்து, கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணும், வேலூரில் பெண் மருத்துவரும், அம்பத்தூர் 13 வயது சிறுமியையும் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவங்கள் இதற்கு உதாரணமாகும். எனவே, பலாத்கார குற்றங்களை தடுத்து நிறுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.