ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி கோட்டாவில் உள்ள வீதி ஒன்றில் நேற்று மாலை சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சிறுவன் பேட்டிங் செய்த பந்து அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று விழுந்து அங்கிருந்த பெண்ணுக்கு சிறு காயம் ஏற்பட்டது.
இது பற்றி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் கோபமடைந்த கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் தரப்பினர் எங்கள் மீது காவல் நிலையத்தில் புகாரா என்று கூட்டமாக சென்று போலீசில் புகார் அளித்த பெண்ணை தாக்கம் முயன்றனர்.
புகார் அளித்த பெண் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்கும் நிலையில் கூட்டமாக சென்று அவரை தாக்க முயன்றவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர்.
இந்த விவகாரம் மத ரீதியான மோதலாக மாறி இரு பிரிவினரும் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் நேற்று இரவு கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
மோதலில் இரண்டு தரப்பினரும் படுகாயம் அடைந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
வன்முறை ஏற்படாமல் தடுக்க வி கோட்டா நகரில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.