ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி கோட்டாவில் உள்ள வீதி ஒன்றில் நேற்று மாலை சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சிறுவன் பேட்டிங் செய்த பந்து அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று விழுந்து அங்கிருந்த பெண்ணுக்கு சிறு காயம் ஏற்பட்டது.
இது பற்றி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் கோபமடைந்த கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் தரப்பினர் எங்கள் மீது காவல் நிலையத்தில் புகாரா என்று கூட்டமாக சென்று போலீசில் புகார் அளித்த பெண்ணை தாக்கம் முயன்றனர்.
புகார் அளித்த பெண் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்கும் நிலையில் கூட்டமாக சென்று அவரை தாக்க முயன்றவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர்.
இந்த விவகாரம் மத ரீதியான மோதலாக மாறி இரு பிரிவினரும் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் நேற்று இரவு கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
மோதலில் இரண்டு தரப்பினரும் படுகாயம் அடைந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
வன்முறை ஏற்படாமல் தடுக்க வி கோட்டா நகரில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.