தமிழில் மந்திரம் செய்யச் சொல்லி புரோகிதர்களுக்கு நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவில்களில் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியிலேயே அர்ச்சனை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. இப்படியிருக்கையில், தமிழகத்தில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.
அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்தாலும், இன்னும் முழுமையாக இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், தமிழில் மந்திரம் செய்யச் சொல்லி புரோகிதர்களுக்கு நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சில சாதிப் பெயர்களை சொல்லி, எங்களுக்கு தமிழ் தான் தெரியும், தமிழிலேயே மந்திரம் சொல்லுங்கள் என்று அந்த நபர் கூறுகிறார். மேலும், தமிழில் மந்திரம் சொல்லாவிட்டால் கல்லை கொண்டு அடிப்பேன் என்றும் அவர் மிரட்டுகிறார்.
இதனால், பூஜைக்கு வந்த புரோகிதர்கள் செய்வதறியாமல் திகைத்து போயினர். மேலும், முதலில் சமஸ்கிரத மொழியில் முடித்து விட்டு, பின்னர் தமிழில் சொல்வதாக அவர்கள் பதில் அளித்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த நபர், தமிழில் மந்திரம் சொல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
ஒருகட்டத்தில் அமைதி காத்து வந்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை சமாதானம் செய்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த நபரின் இந்த செயலுக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பாஜக பெண் நிர்வாகியான காயத்ரி ரகுராம், இந்த வீடியோவை பகிர்ந்து, “ஏன் பிராமணர்களை பூஜைக்கு கூப்பிட்டு பதற்றத்தை உருவாக்குகிறார்கள்? பூஜை செய்ய அடுத்த முறை பெரியாரை அழைக்கவும். தமிழ் பூஜை பற்றி சொல்லி தமிழ் பூஜை செய்வார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.