ஆளுநர் தமிழிசையை ஒருமையில் பேசிய அண்ணா விருது பெற்றவர் இவர்தானா?

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலையில் நேற்று பாரதியார் நினைவு நுாற்றாண்டு விழா பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. ஆய்வரங்கை துவக்கி வைத்து புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், பெண்கள் உயர்வுக்காக பாடுபட்ட பாரதியாருக்கு, பெண்கள் அனைவரும் நன்றிக் கடன் செலுத்த கடமைப்பட்டுஉள்ளோம். சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது.

இணைய வழியில் தமிழை உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறோம். எனவே, இணையதளத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும். அழகிய தமிழ் அண்ணா விருது பெற்ற ஒருவர், ‘இரு மாநிலங்களுக்கு அவள் கவர்னராக உள்ளாள்’ என என்னை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார். ‘இரு மாநிலங்களுக்கு இவள் ஆளுநரா?’ என ஒருமையில் விமர்சனம் செய்து திட்டியிருந்தார்.

இரண்டு மாநிலத்தில், ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமம் ஒரு தமிழச்சி, இரண்டு மாநிலங்களையும் நிர்வாகம் செய்வதை எண்ணி, ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்! எதிர் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றால் கூட, தமிழ் மொழியின் இனிமையும், தொன்மையும் கெடாத வகையில் அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.

திட்டுவதை கூட, அழகு தமிழில் திட்டுங்கள். மரியாதை தெரியாவிட்டால், நீங்கள் தமிழர்களே இல்லை என தமிழிசை சவுந்தர்ராஜன் ஆதங்கம் பொங்க கண்கலங்க வேதனையுடன் தெரிவித்தார்.

தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசையை பற்றி நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு வேதனை தெரிவிக்கும் விதமாக இவ்விழாவில் தமிழிசை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழிசையின் இந்த பதிவுக்கு பிறகு நாஞ்சில் சம்பத், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், அண்ணா விருது பெற்ற நான் அதற்கு தகுதியுள்ளவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் என்னை போல் தமிழை சரியாக அழகாக பேசுபவர் எவரும் இல்லை. அப்படி இருந்தால் என்னுடன் போட்டிக்கு வர சொல்லுங்கள் போட்டியில் அவர் ஜெயித்து விட்டால் அந்த இடத்திலேயே செத்து விடுகிறேன் என பேசியுள்ளார்.

மேலும், அநாகரீகமாக தமிழில் பேசியதாக தமிழிசை வேதனை தெரிவித்துள்ளதற்கு, உங்களிடம் அதற்கான பதில் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, சித்ரவதை செய்து கொன்றாலும் நான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கண்டனங்களை பெற்று வருகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

4 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

4 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

5 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

5 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

5 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

6 hours ago

This website uses cookies.