தேனி : தேனி மாவட்டம் தேனி – வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக ராட்டிணம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே உள்ள உப்பார்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் பெயர் முத்துக்குமார் (35). இவர் எலக்டிரிசன் ஆக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், தேனி அருகே உள்ள வீரபாண்டியில் தற்போது நடைபெற்று வரும் கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் பக்தர்களின் பொழுதுபோக்குக்காக ராட்சச ராட்டினங்கள் உள்பட பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும், முத்துக்குமாரும் அந்த பொருட்காட்சி பகுதிகளில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளதாக தெரிகிறது.
வழக்கம்போல் பணியாற்றி வரும் பொழுது தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் கம்பத்தில் மின்சார பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரபாண்டி அரசு மருத்துமனைக்கு முத்துக்குமாரின் உடலை அனுப்பி வைத்தனர்.
மேலும், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் முத்துக்குமாரின் உடலை அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த முத்துக்குமாருக்கு ஏழு வயதில் விஷால் பாண்டி என்ற மகனும், 10 வயது விசாலினி என்ற மகளும், ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.