தமிழிசை குறித்து மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்துகளுக்காக வருந்துகிறேன் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், நான் மது குடித்தது கிடையாது, ஆனால் தன் மீது விமர்சனம் செய்த தமிழிசையும் என்னை போலவே குடிக்க மாட்டார் என நம்புகிறேன் என கூறினார்.
இதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், திருமாவளவன் கீழ்தரமான கருத்தை சொல்லுவார் என கனவிலும் நினைத்ததில்லை என கூறியிருந்தார்.
இதையும் படியுங்க: நடுரோட்டில் உருண்டு விழுந்த இரும்பு குண்டு… கார், இருசக்கர வாகனம் சேதம் : கோவையில் பரபரப்பு!!
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இது குறித்து பேட்டியளித்த திருமாவளவன், காந்தி பிறந்தநாளில் மது ஒழிப்பு மாநாடு நடத்தினோம், அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென் றபோது ஆளுநர் வந்த பிறகு தான் அனுமதிக்க முடியும் என காவல்துறை தெரிவித்ததால், மாநாடுக்கு செல்ல வேண்டும் என்பதால் காத்திருக்க முடியவில்லை.
இதில் என்ன குற்ற உணர்வு? தரம் தாழ்ந்து பேச என்ன இருக்கு? இது அவரை காயப்படுத்தினால் வருந்துகிறேன், எனக்கு தமிழிசையுடன் நீண்ட நாள் பழக்கம் இருக்கிறது, அவரது தந்தை, அவரது கணவர் ஆகியோர் மீது மிகுந்த மரியாதை உள்ளது.
அவரோட தந்தை மது ஒழிப்பு மாநாட்டை பாராட்டி 2 பக்கம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். மது ஒழிப்பு கொள்கையில் திருமாவளவனுக்கு முரண்பாடு உள்ளது என தமிழிசை சொன்னதால்தான் நான் பதிலளித்தேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.