சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. நேற்று நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி சந்தித்தார். பின்னர், நேற்று மாலை நீலகிரியிலிருந்து சென்னை வந்தடைந்த திரௌபதி முர்முக்கு, தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி வருகை வரலாற்று முக்கியத்துவம். குடியரசு தலைவர் வருகை சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் உள்ளன.
பள்ளிக் கல்வியை காமராஜர் வளர்த்தார், கல்லூரிக் கல்வியை கருணாநிதி வளர்த்தார், தற்போது திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பேரறிஞர் அண்ணா சென்னை பல்கலையில் தான் படித்தார், நானும் இங்கு தான் படித்தேன் என்று பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனவர்களுக்கு உரையாற்றினார்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.