தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு காணப்பட்டு வந்தது. நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணம் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் வந்து விடும் என்றும், இது நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதனிடையே, கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாட்டல் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், நிலக்கரி வந்த பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது.
210 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய 5 அலகுகளை கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வருகிறது. இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடால் 4 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஒரு அலகில் மட்டுமே மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.
இதேபோல, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளைக் கொண்ட முதல் பிரிவும், 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகைக் கொண்ட இரண்டாவது பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
நேற்று நிலக்கரி தட்டுப்பாடினால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் முதல் பிரிவில் உள்ள 2,3 மற்றும் 4வது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் அலகில் மட்டுமே மின்உற்பத்தி நடந்து வருகிறது.
இந்த நிலையில், 2வது பிரிவில் கொதிகலன் குழாய் வெடிப்பால் 600 மெகாவாட் மின்உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. நேற்று 7000 டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருந்த நிலையில், சரக்கு ரயில் மூலமாக 16 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டதால், தற்போது 23 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அனல்மின் நிலையங்கள் முடங்கி போவது, மீண்டும் மின்தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விடுமோ..? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.