தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு காணப்பட்டு வந்தது. நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணம் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் வந்து விடும் என்றும், இது நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதனிடையே, கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாட்டல் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், நிலக்கரி வந்த பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது.
210 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய 5 அலகுகளை கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வருகிறது. இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடால் 4 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஒரு அலகில் மட்டுமே மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.
இதேபோல, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளைக் கொண்ட முதல் பிரிவும், 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகைக் கொண்ட இரண்டாவது பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
நேற்று நிலக்கரி தட்டுப்பாடினால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் முதல் பிரிவில் உள்ள 2,3 மற்றும் 4வது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் அலகில் மட்டுமே மின்உற்பத்தி நடந்து வருகிறது.
இந்த நிலையில், 2வது பிரிவில் கொதிகலன் குழாய் வெடிப்பால் 600 மெகாவாட் மின்உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. நேற்று 7000 டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருந்த நிலையில், சரக்கு ரயில் மூலமாக 16 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டதால், தற்போது 23 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அனல்மின் நிலையங்கள் முடங்கி போவது, மீண்டும் மின்தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விடுமோ..? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.