தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு காணப்பட்டு வந்தது. நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணம் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் வந்து விடும் என்றும், இது நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதனிடையே, கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாட்டல் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், நிலக்கரி வந்த பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது.
210 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய 5 அலகுகளை கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வருகிறது. இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடால் 4 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஒரு அலகில் மட்டுமே மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.
இதேபோல, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளைக் கொண்ட முதல் பிரிவும், 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகைக் கொண்ட இரண்டாவது பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
நேற்று நிலக்கரி தட்டுப்பாடினால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் முதல் பிரிவில் உள்ள 2,3 மற்றும் 4வது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் அலகில் மட்டுமே மின்உற்பத்தி நடந்து வருகிறது.
இந்த நிலையில், 2வது பிரிவில் கொதிகலன் குழாய் வெடிப்பால் 600 மெகாவாட் மின்உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. நேற்று 7000 டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருந்த நிலையில், சரக்கு ரயில் மூலமாக 16 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டதால், தற்போது 23 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அனல்மின் நிலையங்கள் முடங்கி போவது, மீண்டும் மின்தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விடுமோ..? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.