தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் எடுத்த முடிவு திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவி விவகாரம் உள்பட திமுகவின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ஆர்என் ரவி முட்டுக்கொட்டை போட்டு வந்தார். உச்சநீதிமன்றத்தின் உதவியை தமிழக அரசு நாடியதன் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.
இருப்பினும், திமுக அரசுக்கு எதிரான செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும், அரசு விழாக்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஆளுநர் தெரிவிப்பதாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படி, திமுகவுக்கும் ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுநர் ஆர்என் ரவி முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்திற்கு தனது வாக்குரிமையை ஆளுநர் ரவி மாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: நீங்க என்னோட சொத்து.. அண்ணாமலைக்கு உருக்கமாக கடிதம் எழுதிய பிரதமர் மோடி!!!
இது தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை காலை 11.00 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மற்றும் ஆளுநரின் துணைவியார் திருமதி. லட்சுமி ரவி, ஆகியோர் சென்னை, வேளச்சேரி சாலையில் உள்ள அட்வண்ட் கிறிஸ்துவ நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு தமிழகத்தின் ஆளுநராக இருந்தவர்கள், தங்களின் வாக்குகளை அவர்களின் சொந்த மாநிலத்திலேயே சென்று பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த ஆளுநர் ஆர்என் ரவி, வாக்குரிமையை தமிழகத்தில் மாற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.